Friday, December 31, 2010

புது வருட உறுதிமொழி

எல்லோருக்கும் வணக்கம்,
எனது புது வருட வாழ்த்துக்கள் .
எல்லோரும் போல நானும் ஒவ்வொரு வருடமும் சில உறுதிமொழி எடுத்து அதை கடைபிடிக்க முடியாமல் மறந்தும் உள்ளேன். சென்ற 2010 ஆண்டு எனது வாழ்நாளில் மறக்க முடியாத புதிய அனுபவங்களை வழங்கியுள்ளது.
என் அலுவலக பணிகளில் முன்னேற்றம் கண்டு, பின்பு எனது வாழ்க்கைதுணையையும் கண்டுகொண்டுள்ளேன்.
இந்த வருட உறுதிமொழியாக நான் எனது கோப வெளிப்பாட்டை கட்டுப்படுத்தவும், வாரம் தவறாமல் ப்ளாக் எழுதவும் என எண்ணியுள்ளேன்.
பார்க்கலாம்.
மற்றவை மற்றொரு எண்ணங்களில்.

Wednesday, May 12, 2010

தடாவில் தாண்டவம்

திரு சுந்தரானந்த சுவாமிகளின் தடாவில் தாண்டவம் .

சென்னை மேற்கு மாம்பலத்தில் ஆசிரமம் நடத்தி , ஆயிரகணக்கான இளைஞர்களை தன் சீடர்களாக கொண்டு , பிரசித்தி பெற்ற திரு சுந்தர சுகபோதானந்தா சுவாமிகளின் மறுபக்கம் அதிர்ச்சி அளிக்க கூடியது.

சிவன் ஆடிய தாண்டவம் ஆன்மீக வாதிகளுக்கு !
மேற்கண்ட சுந்தர சுகபோதானந்தா தடாவில் ஆடிய தாண்டவம் , சுக போகவாதிகளுக்கு !!!