Tuesday, August 05, 2008

தமிழ் பற்று

சமீபத்தில் மீண்டும் சுஜாதாவின் " கற்றதும் பெற்றதும்" படித்தேன். அதில் சொன்ன ஒரு செய்தி என்னை யோசிக்க வைத்தது.

"ஆங்கில புத்தகத்தின் ஆரம்ப விலையே 300 ரூபாய் என்கிறார்கள் . அதை எந்த ஒரு பாகுபாடுமின்றி , ஏக மனதாக வாங்குகின்றோம். ஆனால் நம் தாய் மொழியாகிய தமிழில் உள்ள ஒரு 20 ரூபாய் புத்தகத்தை வாங்க ஆயிரம் முறை யோசிக்கிறோம்". ஏன் இந்த வேறுபாடு?

இதற்கு இரு பதில்கள் உதித்தன. ஒன்று தமிழில் வரும் பெரும்பாலான புத்தகங்கள் சினிமா உஊடகத்தையோ அல்லது சிற்றின்ப பத்திரிகையகவோ தான்இருக்கிறது. ஆங்கிலத்தில் இது போல் இல்லை என்று சொல்ல வரவில்லை .
ஆங்கிலத்தில் உள்ளது போல் நாம் அன்றாட வாழ்வியலுக்கும் தொலைநோக்கு பார்வைக்கும் உள்ள நன்மைகளையும் தீமைகளையும் விவரிப்பதில்லை. இதை பற்றி மேலும் வரும் வாரங்களில் சிந்திப்போம்.
வணக்கம்.

No comments: