Wednesday, April 22, 2009

இந்திய தேர்தலும் இலங்கை தமிழரும்

இந்திய பொது தேர்தலில் மக்கள் பிரச்சனைகளான விலைவாசி ஏற்றம் , வேலை இழப்பு, பொருளாதார வீழ்ச்சி என்பவன பற்றி அதிகம் பேசப்படுவதில்லை.





வடக்கே - தீவிரவாதிகளால் ஏற்படும் பயம் ; தாலிபன்களால் ஏற்படும் பீதி ; செயல்படாத மற்றும் வலு இல்லாத பிரதமர் என்ற எதிர்கட்சிகளின் தாக்குதல்கள்.





தெற்கே - நடிகர்கள் அரசியல் பிரவேசத்தால் ஏற்படும் மாற்றங்கள் ; இலங்கை தமிழர் மற்றும் தனி ஈழம் தொடர்பான பிரச்சனைகள்.





இதுவரை தனி ஈழம் எதிர்ப்பு மற்றும் விடுதலை புலிகளுக்கு எதிரான கொள்கை கொண்ட ஜெயலலிதா -


தேர்தல் கூட்டு காரணமாக தனி மாநில அந்தஸ்து அல்லது தனி ஈழம் கிடைத்தால் மகிழ்ச்சி என்கிறார்.


பிரபாகரன் எனது நண்பர் , ஆனால் நான் தீவிரவாதி அல்ல - என்ற கருணாநிதியின் வாக்குமுலத்தில் அவரது கபடம் வெளிப்படுகிறது .


தனி ஈழம் விடுதலை இயக்கம் ஆனதால்தான் விதலை புலிகள் இருந்தார்கள். ஆனால் , சில தீவிரவாதிகள் அதில் ஈடுப்பட்டர்கள் என்று முன்னுக்கு பின் முரணான பேச்சுக்களால் தனது நிலையில் இருந்து தாழ்ந்து போயுள்ளார் கலைஞர்.


"பிரபாகரன் பிடிபட்டால் போர் கைதி போல் மதிக்கப்பட வேண்டும் "என்ற கோரிக்கையை இலங்கை அரசுக்கு வைக்கிறார் மு. க .


தமிழர் உணர்வை மையமாய் வைத்து தனி ஈழத்திற்கு ஆதரவு தரும் திருமாவளவன் ;


இது பற்றி பேசாவிட்டால் நம்மை யாரும் மதிக்கமாட்டார்கள் என்ற போக்கில் தனி மாநில அந்தஸ்து கோரும் கமுனிஸ்ட்கள் ;


பிரபாகரன் பிடிபட்டலோ அல்லது கொல்லப்பட்டாலோ - தமிழகத்தில் ரத்த

ஆறு ஓடும் என்கிற வைகோ ;


இவர்களின் நடுவே மாட்டிக்கொண்டு இலங்கை தமிழருக்காக தங்களுக்கு தங்கள் பதவி பதவி பதவி தமிழன்.


உண்மையில் இலங்கை தேவுய் த தங்களுக்கு थंगल தங்கள் வாரிசுகளுக்கு - மத்திய அரசை பணிய வைக்க - எல்லா தமிழ் ஈழ ஆதரவாளர்கள் இந்திய பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கலாமே !!!



தமிழ் நாட்டில் உள்ள இலங்கை ஆதரவு தமிழ் கட்சிகளுக்கு தேர்தல் தேவையா ??

No comments: